S.Raj kumar

S.Raj kumar

Share

Seermarapina Welfare Board

Official account of K.S .Raj Gonder Founder-Pudhiya Dravida Kalagam(P.D.K)-Kongu Nadu Vettuva Gounder Elaingar Nala Sangam-General Secretary-Member of Tamil Nadu Govt.

Photos from S.Raj kumar's post 16/06/2026

இன்றைய தினம் நடைபெற்ற பல்வேறு திருமண வரவேற்பு விழாவில் கொங்கு தளபதியார் கே. எஸ்.ராஜ் கவுண்டர் அவர்கள் புதிய திராவிட கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள் 💐💐💐

10/06/2026

தமிழ் மக்களின் பாசத்துக்குரிய பாரதி ராஜா அவர்களுக்கு புதிய திராவிட கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம் 😭😭💐💐

Photos from S.Raj kumar's post 07/06/2026

இன்றைய தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி திடுமல் ராசாம் பாளையம் ஸ்ரீ அருள்மிகு விநாயகர் மற்றும் ஸ்ரீ பகவதி அம்மன் பொட்டுச்சாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தில் புதிய திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கொங்கு தளபதியார் கே .எஸ் .ராஜ் கவுண்டர் அவர்கள் புதிய திராவிட கழகம் நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்தார் உடன் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெகதீசன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் உள்ளூர் பொதுமக்கள் கொங்கு தளபதி அவர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை வழங்கினார்கள் …

Photos from S.Raj kumar's post 04/06/2026

புதிய திராவிட கழகம் சார்பாக புதியதாக பொறுப்பேற்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

01/06/2026

புதிய திராவிட கழகம் சார்பாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட செய்தியை வெளியிட்ட மாலைமலர் க்கு நன்றிகள் 💐💐🙏🙏

Photos from S.Raj kumar's post 31/05/2026

கோபி கொடிவேரியில்

மன்னன் கொங்காள்வான் அவர்களுக்கு வெண்கல சிலை உடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும்

புதிய திராவிட கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு, மே. 31-

புதிய திராவிட கட்சி, கொங்கு வேட்டுவ கவுண்டர் இளைஞர் சங்கம் சார்பில் மாநிலச் செயற்குழு கூட்டம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது கூட்டத்துக்கு புதிய திராவிட கட்சியின் நிறுவன தலைவர் ராஜ் கவுண்டர் தலைமை தாங்கினார்…..
கேபிள் கணேஷ் முன்னிலை வகித்தார் மாநில அமைப்பு செயலாளர் இம்மானுவேல் நாடார், நன்றி வணக்கம் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஸ், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சர்மா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், சண்முகவேல், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த், சரத்குமார் நன்றி வணக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசு கொங்கு ராம் பசுவை தென்னரசு சுந்தர் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் தாமோதர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவுரை கௌதம் வழங்கினார் முடிவில் தாமோதரன் நன்றி தெரிவித்து பேசினார்

கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

பணநாயகத்தையும், அதிகார பலத்தையும் ஒளித்து மக்கள் பேராதரவுடன் வெற்றி பெற்றிருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய திராவிட கழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .
தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையாக ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்றத் தொகுதி கொடிவேரியில் அணை கட்டிய வேட்டுவ கவுண்டர் மாமன்னர் கொங்கு ஆழ்வாருக்கு ரூ.5 கோடி மதிப்பில் வெண்கலச் சிலை உடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் .
அதேபோல் கொல்லிமலையை ஆண்ட வேட்டுவக் கவுண்டர் மாமன்னன் வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன..

பின்னர் புதிய திராவிட கழக தலைவர் ராஜ் கவுண்டர் நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது,
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காததால் திமுக தோல்வியை தழுவி உள்ளது சமூக நீதி என்று சொல்லும் திமுக அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்திருந்தால் வெற்றி பெற்று இருந்திருக்கலாம்
எனவே இனியாவது அனைத்து சமுதாய மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க திமுக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும்… இது சம்பந்தமாக நான் திமுக தலைவர் மு க ஸ்டாலினை அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன்
திமுக உடன் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 26-ம் ஆண்டு தற்போது வரை தொடர்ந்து கூட்டணியில் இருந்து வருகிறோம்

இதே மண்டபத்தில் புதிய திராவிட கழகம் மாநாடு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது … அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி எழுமாத்தூரில் 6-வது சமூக நீதி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் கொங்கு மண்டலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் அனைத்து தரப்பு பிரதிநிதித்துவம் திமுகவால் வழங்கப்படவில்லை

வரும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்தால் நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் தொடர்வோம் இல்லையென்றால் வரும் இடைத்தேர்தலில் பெருந்துறை தாராபுரம் மயிலம் திருச்சி போன்ற தொகுதியில் புதிய திராவிட கழகம் தனித்துப் போட்டியிடலாமா என முடிவு செய்யப்படும் மேலும் தேர்தல் தோல்வியை மறந்து நமது கழக நிர்வாகிகள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் அப்போதுதான் உள்ளாட்சித் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் நம் குறிப்பிடத்தக்க வெற்றி பெற முடியும் … தொடந்து அனைத்து மக்களின் வளர்ச்சிக்காக புதிய திராவிட கழகம் போராடும் மாபெரும் வெற்றி பெறும்…

Photos from S.Raj kumar's post 30/05/2026

இன்றைய தினம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்ட மன்ற தொகுதியில் நடைபெற்ற பல்வேறு திருமண வரவேற்பு விழாவில் கொங்கு தளபதியார் கே .எஸ். ராஜ் கவுண்டர் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் 💐💐💐💐💐

30/05/2026

புதிய திராவிட கழகத்தின் நாமக்கல் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் s.விஜயவர்மன் அவர்கள் இல்ல திருமண விழா வள்ளல் எம்ஜிஆர் திருமண மண்டபம் பொத்தானூரில் நடைபெற்றது… திருமண விழாவில் கொங்கு தளபதியார் கே. எஸ்.ராஜ் கவுண்டர் அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் s.கதிரவன், p. வேணி அவர்களை வாழ்த்தினார்கள்…. உடன் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் திரு ஜெகதீஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…..

29/05/2026

புதிய திராவிட கழகம் கோவை மாவட்ட தலைவர் இல்ல விழாவில் கொங்கு தளபதியார் அவர்கள் கலந்து கொண்டார் ………… இன்றைய தினம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் புதிய திராவிட கழகம் தெற்கு மாவட்ட தலைவர் N. குமார் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதிய திராவிட கழக நிறுவன தலைவர் கே. எஸ். ராஜ் கவுண்டர் அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் k. சூரிய பிரகாஷ், s.ஷாலினி ஆகியோரை வாழ்த்தினார்கள்…. உடன் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. s. தங்கவேல் அவர்கள் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் p.பார்த்திபன் பொள்ளாச்சி s.லோகு, சபரி , s.ராமசாமி மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர் ….

Photos from S.Raj kumar's post 29/05/2026

கரூர் மாவட்டம் அரவகுறிச்சி சட்ட மன்ற தொகுதி கரூர் டூ கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மயில் கஃபே மற்றும் உணவக திறப்பு விழாவில் கொங்கு தளபதியார் கே. எஸ். ராஜ் கவுண்டர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்…. உடன் கரூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தென்னிலை பெரியசாமி மற்றும் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்…..

Want your public figure to be the top-listed Public Figure in Erode?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


46, Karuthipalayam, Thamaraipalayam, Kodumudi
Erode
638152