Q Echo

Q Echo

Share

You're on Q Echo! Discover and share stories, videos, and pictures from Qatar, Sri Lanka, India, and across the globe. Send us a message to join in!

24 மணி நேர தமிழ் செய்திகள்

14/06/2026

14/06/2026

Metro from Hamad International Airport

27/05/2026

தரையில் விரித்து அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பவர், ஐவரி கோஸ்ட் (Côte d’Ivoire) நாட்டின் ஜனாதிபதி டாக்டர் ஹசன் அப்துர் ரஹ்மான் வத்தாரா அவர்கள்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற அவர் எந்த ஆடம்பரமும் இன்றி, தனது சொந்த செலவில் புனித பயணத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சவூதி அரச மன்றம் மரபுப்படி வழங்கியிருந்த அரண்மனை தங்குமிடத்தையும் பணிவுடன் மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தை பார்த்த பலரின் மனதில் எழுந்த ஒரே கேள்வி — “அவருடைய பாதுகாப்பு எங்கே?”
ஏனெனில், அவருடன் எந்த பெரிய பாதுகாப்பு படையும் இல்லையென கூறப்படுகிறது.

ஆனால் அதற்கான பதிலை இந்த ஒரு படம் தானாகவே சொல்லுகிறது…

ஒரு தலைவர் தனது மக்களிடம் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தால், மக்கள் அவரை அச்சமின்றி நேசிப்பார்கள். மக்கள் பாதுகாப்பாக வாழும் நாட்டின் தலைவர், தானும் அமைதியாக உறங்க முடியும்.

ஹசன் அவர்கள் ஆட்சியை ஏற்ற பின்னர், ஐவரி கோஸ்ட் நாடு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையை அடைந்ததாக உலக ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. குறுகிய காலத்திலேயே அந்நாட்டின் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் ஒரு சாதாரண காட்சி அல்ல… அதிகாரம் என்பது ஆடம்பரத்தில் இல்லை, மக்களின் நம்பிக்கையில் இருக்கிறது என்பதற்கான நினைவுச் சின்னம்.
அல்லாஹ் அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு, அனைத்து நன்மைகளிலும் வெற்றியளிப்பானாக. ஆமீன் 🤲

குறிப்பு : இது 2024 ஹஜ் புகைப்படம் தற்போது வைரல்

12/05/2026

இவர்தான் திரு. வெங்கடரமணன் தமிழ்நாட்டில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார், இவர் ஒரு பிராமணர் மற்றும் RSS க்காரர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று..

இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல ஆங்கில பத்திரிகைக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் திராவிட ஆட்சி தமிழ்நாட்டிலிருந்து துடைக்தெரியப்பட்டதாகவும், திராவிட அரசியலுக்கு தமிழ்நாட்டுல இனி வேலையே இல்லையென்றும், இனி முழுமுழுக்க தமிழ்நாட்டை ஆளப்போறது எங்கவா மட்டும்தான் என்று பேட்டியில் கூறியிருக்கிறார்..

இந்த பிராமணர் எப்படி TVK கட்சியில் இணைந்தார், அதில் இவர் எப்படி வெற்றிப்பெற்று அதிலும் குறிப்பாக
கல்வி அமைச்சர் ஆனார் என்பது தனி அத்தியாயம்..

தமிழ்நாட்டு படிக்கும் பிள்ளைகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் கல்வித்துறை இப்போது இவர் கையில் சிக்கியிருக்கிறது என்பது தற்போது படிக்கும் பிள்ளைகள் எதிர்கால மாணவர்களின் விதி..

இனி PM Shree, NEP, மூன்று மொழி கொள்கை உள்ளே வந்துவிடும்.. NEP யில் மூன்று மொழி கொள்கையை மட்டுமே நாம் பார்க்கிறோம், ஆனால் அதில் 10, +2 வில் பெயில் என்று இருந்தது போய் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கூட மாணவர்கள் ஃபெயில் ஆவது என்றாகிவிடும்.. அதாவது அவர்கள் பிஞ்சியிலேயே வடிக்கட்ட படுவார்கள், குலக்கல்வியும் உள்ளே வந்துவிடும்.. RSS சாகா பயிற்றிச்சியும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும்..

ஒரு RSS க்காரன் கையில் நாடு கிடைத்தால் அது என்னாவாகும் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்..

08/05/2026

வீட்டில் இருந்துகொண்டே தமிழ்நாட்டை ஆளப்போகும் முதல் மனிதர் (முதல்வர்) எம்.கே. ஸ்டாலின்.

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.

அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.

ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.

மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

13/04/2026

ஆண்கள் பெண்கள் இருவருக்குமான இந்த காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு சிந்தித்து செயல்பட வேண்டியது இன்றைய தலைமுறை

10/04/2026

வஹாபிகள் = சயோனிசம்

முஸ்லிம் நாடுகளில் உள்ள CIA மற்றும் அமெரிக்க இராணுவ தளங்களை மூட வேண்டும் என்று ஒரே ஒரு வஹாபியும் கூட அழைப்பு விடுக்கவில்லை.

“இஸ்ரேல்” நோக்கி செல்லும் ஏவுகணைகள் அரபு நாடுகளால் தடுக்கப்படுவதைக் குறித்து ஒரே ஒரு வஹாபியும் கேள்வி எழுப்பவில்லை.

காசா படுகொலைவும், ஈரான் போரும்தான் அரபு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்கள் சயோனிச ஆதரவாளர்கள் என்பதை உம்மத்துக்கு தெளிவாக காட்டியுள்ளன.

ஆனால், வளைகுடா நாடுகள் ஏற்பாடு செய்த சிலர் மட்டும் அந்த சயோனிச ஆதரவு அரபு ஆட்சியாளர்களைக் காப்பாற்ற முனைந்துள்ளனர்.

அவர்கள் தாடியும் தோப்பும் அணிந்த சயோனிசர்கள்; முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவி உள்ளனர்.

Note : இமாம் வஹ்ஹாப் அவர்களுக்கு “வஹாபியம்” எனப்படும் இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை.

Photos 22/03/2026

சிந்தியுங்கள் !

Photos from Q Echo's post 03/03/2026

இந்தியர்களே தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்!!!!

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Sangaraja Mawatha
Colombo
0094